ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உள்ள மொபைல் போன்களில் இன்னும் எச்.டி.சி. நிறுவனப் போன்களே முன்னணியில் உள்ளன. மாதம் ஒரு மாடலை இந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் பேனலை நம் விருப்பப்படி மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம் என்பதால் இந்த பெயர் தரப்பட்டுள்ளது. மேலும் இதனாலேயே இளைஞர்கள் இதனை விரும்பலாம்.
மேலும் ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட குறைந்த விலை போனாக இது இருப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பயன்படுத்த எண்ணுவார்கள். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,3ஜி சப்போர்ட், எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், வை–பி இணைப்பு, A2DPஇணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட்,ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 3 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் பல மொபைல் போன்கள் விழாக் காலத்தினை ஒட்டி வெளியிடப்படலாம். மேலே கூறப் பட்டவை உறுதியாகத் தெரிந்த நிறுவனப் போன்களாகும்.
No comments:
Post a Comment